/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி தாயாரின் 3வது கணவர் போக்சோவில் கைது
/
சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி தாயாரின் 3வது கணவர் போக்சோவில் கைது
சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி தாயாரின் 3வது கணவர் போக்சோவில் கைது
சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி தாயாரின் 3வது கணவர் போக்சோவில் கைது
ADDED : ஆக 09, 2024 03:42 AM
பள்ளிப்பாளையம்: எலந்தகுட்டை பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியில் பலாத்-காரம் செய்ய முயன்ற, தாயாரின், 3 வது கணவரை, வெப்-படை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே வெப்படை அடுத்த எலந்தகுட்டை பகுதியை சேர்ந்தவர், 13 வது சிறுமி. சிறுமியின் தாயாரின் மூன்றாவது கணவன் கோபி (எ) கோபாலகி-ருஷ்ணன்,45. இவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
இது குறித்து சிறுமி தனது தாயாரிடம் சொல்லி அழுதுள்ளார். அவர் வெப்படை போலீசில் கடந்த 5ம் தேதி புகார் செய்தார். இதை அறிந்த கோபி (எ) கோபாலகிருஷ்ணன் தலைமறைவாக இருந்தார்.
வெப்படை போலீசார், நேற்று மாலை எலந்தகுட்டை பகு-தியில் பதுங்கி இருந்த கோபி (எ) கோபாலகிருஷ்ணனை போக்-சோவில் கைது செய்தனர்.