/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சீசன் தொடங்கிய 5வது வாரத்தில்மஞ்சள் ரூ.1.30 கோடிக்கு ஏலம்
/
சீசன் தொடங்கிய 5வது வாரத்தில்மஞ்சள் ரூ.1.30 கோடிக்கு ஏலம்
சீசன் தொடங்கிய 5வது வாரத்தில்மஞ்சள் ரூ.1.30 கோடிக்கு ஏலம்
சீசன் தொடங்கிய 5வது வாரத்தில்மஞ்சள் ரூ.1.30 கோடிக்கு ஏலம்
ADDED : ஏப் 09, 2025 01:50 AM
சீசன் தொடங்கிய 5வது வாரத்தில்மஞ்சள் ரூ.1.30 கோடிக்கு ஏலம்
நாமகிரிப்பேட்டை:மஞ்சள் சீசன் தொடங்கிய, ஐந்தாவது வாரத்தில், நேற்று அதிகபட்சமாக, 1.30 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
நாமக்கல் மாவட்டத்தில், மஞ்சள் விற்பனையில் நாமகிரிப்பேட்டை முக்கிய இடத்தை வகிக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் உள்ள முக்கியமான மஞ்சள் மார்க்கெட்டில் நாமகிரிப்பேட்டையும் ஒன்று.
இங்கு கூட்டுறவு அமைப்பான ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் விற்பனை நடந்து வருகிறது. கடந்த, ஐந்து வாரங்களுக்கு முன் மஞ்சள் வரத்து தொடங்கியது.
சீசன் தொடங்கிய முதல் வாரம், 179 மூட்டை மஞ்சள், 14 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 12,145 ரூபாய், அதிகபட்சம், 16,939 ரூபாய்; உருண்டை ரகம் குறைந்தபட்சம், 9,569 ரூபாய், அதிகபட்சம், 14,142 ரூபாய்; பனங்காலி, 7,269 ரூபாயிலிருந்து, 28,375 ரூபாய் வரை விற்பனையானது.
விரலி, 1,080 மூட்டை, உருண்டை, 430, பனங்காலி, 40 என, 1,550 மூட்டை மஞ்சள், 1.30 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. சீசன் தொடங்கி, ஐந்தாவது வாரத்தில் உச்சபட்சமாக நேற்று மஞ்சள், 1.30 கோடி ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.