/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் 8 தாலுகா ஆபீசில் 10ல் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்
/
மாவட்டத்தில் 8 தாலுகா ஆபீசில் 10ல் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்
மாவட்டத்தில் 8 தாலுகா ஆபீசில் 10ல் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்
மாவட்டத்தில் 8 தாலுகா ஆபீசில் 10ல் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்
ADDED : ஆக 08, 2024 06:32 AM
நாமக்கல்: 'மாவட்டத்தில் உள்ள, 8 தாலுகா அலுவலகங்களில், வரும், 10ல், ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
பொது வினியோக திட்டம் மூலம், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு கோருதல், மொபைல் எண் பதிவு போன்ற சேவைகளை மேற்-கொள்வதற்காக, ரேஷன் கார்டு தாரர்கள் குறைதீர் முகாம், மாதம் தோறும், 2ம் சனிக்கிழமை நடத்தப்படுகிறது. மேலும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி, பொது வினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், ரேஷன் கார்டுகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகி-றது.
அதன்படி, இம்மாதத்திற்கான குறைதீர் முகாம், வரும், 10 காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை, நாமக்கல், ராசி-புரம், மோகனுார். சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்-கோடு, ப.வேலுார் மற்றும் குமாரபாளையம் தாலுகா அலுவலகங்-களில் உள்ள, வட்ட வழங்கல் பிரிவில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடக்கிறது. பொதுமக்கள், இந்த குறைதீர் நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.