/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குழந்தையுடன் விஷம் குடித்த இளம்பெண் உயிரிழப்பு
/
குழந்தையுடன் விஷம் குடித்த இளம்பெண் உயிரிழப்பு
ADDED : ஆக 25, 2024 01:20 AM
நாமகிரிப்பேட்டை, ஆக. 25-
நாமகிரிப்பேட்டை அடுத்த ஒடுவன்குறிச்சியை சேர்ந்தவர் தினேஷ், 30. இவரது மனைவி லட்சுமி, 26. இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 6 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லட்சுமி, நேற்று முன்தினம் மதியம், விஷமாத்திரையை சாப்பிட்டார். சிறிது நேரத்தில், தன் குழந்தைக்கும் விஷ மாத்திரை கொடுத்துள்ளார். வாந்தி எடுத்த லட்சுமியை உறவினர்கள் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, குழந்தையை நாமக்கல்லுக்கும், லட்சுமியை சேலத்திற்கும் கொண்டு சென்றனர். அங்கு, நேற்று லட்சுமி உயிரிழந்தார். நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.