/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சோழீஸ்வரர் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை
/
சோழீஸ்வரர் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை
ADDED : ஜூலை 06, 2024 05:52 AM
மல்லசமுத்திரம் : ஆனி அமாவாசையையொட்டி, மல்லசமுத்திரத்தில் உள்ள பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி உடனமர் சோழீஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் நெய் தீபமேற்றி வழிபட்டனர். மேலும், மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்-றின்மீது உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், உச்சிகால சிறப்பு பூஜை நடந்தது.
அதேபோல், சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், காலை, 6:00 மணி முதல் மாலை வரை, மூலவருக்கு பல்வேறு மூலிகை திரவி-யங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. கோவில் முழுதும் வண்ண மலர்கள், கனிகளால் அலங்காரம் செய்யப்பட்-டிருந்தது. உட்பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்-தனர்.