/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அண்ணாமலையை கண்டித்து காங்., கட்சி ஆர்ப்பாட்டம்
/
அண்ணாமலையை கண்டித்து காங்., கட்சி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 12, 2024 01:09 AM
நாமக்கல், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து, காங்., கட்சி சார்பில் நாமக்கல்லில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை குறித்து, சமீபத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்த பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, ரவுடி என்ற வகையில் அவதுாறான கருத்துக்களை பேசியதால், காங்., சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், அண்ணாமலையை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல்லில், பூங்கா சாலையில் கிழக்கு மாவட்ட காங்., கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். மாநில செய்தி தொடர்பாளர் டாக்டர் செந்தில், நகர தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பா.ஜ., தலைவருக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். பாதுகாப்பில் இருந்த போலீசார் அதனை தடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்ட தலைவர் வீரப்பன், வட்டார தலைவர்கள் தங்கராஜ், இளங்கோ, ஷேக்உசேன், மகளிர் அணி ராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.