sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் அனுமதி பெற கால அவகாசம் நீட்டிப்பு

/

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் அனுமதி பெற கால அவகாசம் நீட்டிப்பு

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் அனுமதி பெற கால அவகாசம் நீட்டிப்பு

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் அனுமதி பெற கால அவகாசம் நீட்டிப்பு


ADDED : ஆக 08, 2024 01:34 AM

Google News

ADDED : ஆக 08, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்,

'அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு அனுமதி பெற, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், திட்டமில்லா பகுதிகளில், 2011 ஜன., 1க்கு முன், கட்டப்பட்டு இயங்கி வரும், அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், இணையதளத்தில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், கடந்த, 1 முதல், 2025 ஜன., 31 வரை, 6 மாத காலம் கால நீட்டிப்பு செய்து, தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.

அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள், மலையிடப்பகுதியில் அமையும்பட்சத்தில், அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். மேலும், இந்த இறுதி வாய்ப்பை தவறாது பயன்படுத்தி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us