/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் வரும் 19 ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
நாமக்கல்லில் வரும் 19 ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
நாமக்கல்லில் வரும் 19 ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
நாமக்கல்லில் வரும் 19 ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூலை 12, 2024 01:09 AM
நாமக்கல், விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் வரும், 19ம் தேதி நாமக்கல்லில் நடக்கிறது.
நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:
நாமக்கல் கோட்ட அளவில், ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும், 19ம் தேதி நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஆர்.டி.ஓ., தலைமையில் நடக்கிறது. நாமக்கல் உட்கோட்டத்தில் உள்ள நாமக்கல், மோகனுார், சேந்தமங்கலம், ராசிபுரம் மற்றும் கொல்லிமலை ஆகிய அனைத்து பகுதி விவசாயிகளும் கலந்து கொள்ளலாம்.
இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில் நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும், மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் மனுக்களாக அளிக்கலாம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.