ADDED : ஜூலை 02, 2024 06:53 AM
ப.வேலுார், : ப.வேலுார், திருஞானசம்பந்தர் மடாலயம், அம்மையப்பர் அருட்பணி அறக்கட்டளை சார்பில், கலிக்கம் கண்சிகிச்சை முகாம், திருஞானசம்பந்தர் மடாலயத்தில், நேற்று நடந்தது. இது-குறித்து, சித்தா டாக்டர் முத்துகிருஷ்ணன் கூறுகையில், ''உடம்பில் உள்ள நோய்களை, மூலிகை சாற்றை கண்கள் வழி-யாக ஊற்றி குணமாக்குவது கலிக்கம் சிகிச்சை எனப்படும்.
இதனால் கிட்ட பார்வை, துாரப்பார்வை, கண்களில் நீர் வடிதல், கண்புரையை சரி செய்தல், தலைவலி, வயிறு, பெண்களின் கர்ப்-பப்பை பாதிப்பு, தோல் வியாதி, நரம்பு பலகீனம், வயது முதிர்வின் நடுக்கம் சம்பந்தமான நோய்கள் சரி செய்யப்படும். மருந்து விடப்படும் நாளில், அசைவம் சாப்பிடக்கூடாது. ஐ.ஓ.எல்., லென்ஸ் வைத்திருக்கும் நபர்களும், இந்த மருந்தை விட்டுக்கொள்ளலாம். கால நிர்ணயம் இல்லை,'' என்றார்.இந்த கலிக்கம் சிகிச்சை, மாதந்தோறும், 1, 16 ஆகிய தேதி-களில், ப.வேலுார் திருஞானசம்பந்தர் மடாலயத்திலும், 25ல் ப.வேலுார் செட்டியார் தெருவில் உள்ள மாணிக்கவாசகர் திரு-மண மண்டபத்திலும், கலிக்கம் கண் சிகிச்சை முகாம் நடக்கிறது.