sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கரையான் பாதிப்பில் இருந்து தப்பிக்க பாக்கு மரங்களுக்கு சுண்ணாம்பு பூச்சு

/

கரையான் பாதிப்பில் இருந்து தப்பிக்க பாக்கு மரங்களுக்கு சுண்ணாம்பு பூச்சு

கரையான் பாதிப்பில் இருந்து தப்பிக்க பாக்கு மரங்களுக்கு சுண்ணாம்பு பூச்சு

கரையான் பாதிப்பில் இருந்து தப்பிக்க பாக்கு மரங்களுக்கு சுண்ணாம்பு பூச்சு


ADDED : ஏப் 17, 2024 02:18 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

‍சேந்தமங்கலம்:கொல்லிமலை அடிவாரம், காரவள்ளி பகுதியில் பாக்கு மரங்களை கரையான் பாதிப்பில் இருந்து பாதுகாக்க, விவசாயிகள் சுண்ணாம்பு கலவையை பூசி வருகின்றனர்.

கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளி, நடுக்கோம்பை, வெண்டாங்கி, பள்ளம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், 700 ஏக்கர் பரப்பளவில் பாக்கு மரங்களை வளர்த்து வருகின்றனர். அதிக தண்ணீர், குளிர்ச்சியான வானிலை தேவைப்படும் இந்த மரங்களுக்கு, விவசாயிகள், தினந்தோறும் தண்ணீர் பாய்ச்சி வந்தனர்.

தற்போது, இப்பகுதியில் வறட்சி காரணமாக கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தது. இதனால், பாக்கு மரங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. காப்பு தன்மை குறையும் என்பதாலும், ஈரப்பதம் குறைந்தால் கரையான் பாதிப்பு அதிகரிக்கும் என்பதாலும், விவசாயிகள் பாக்கு மரங்களுக்கு சுண்ணாம்பு கலவையை பூசி வருகின்றனர்.

இதுகுறித்து, நடுக்கோம்பையை சேர்ந்த விவசாயி சேகர் கூறியதாவது: கொல்லிமலை அடிவார பகுதியில் அதிகளவில் பாக்கு மரங்களை வளர்த்து வருகிறோம். கொல்லிமலையில் மழை பெய்தால், தண்ணீர் காரவள்ளி வழியாக இங்குள்ள ஆறுகளில் ‍செல்லும். இதனால், இப்பகுதியில் உள்ள கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது. ஆனால், இந்தாண்டு மழை இல்லாததால் கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்கும் வகையில் கரையான் தாக்காதவாறு, பாக்கு மரங்களில் சுண்ணாம்பு கலவையை பூசி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us