sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குழந்தைகளுடன் மனைவி இறந்த நிலையில் மாயமான தனியார் ஊழியரும் தற்கொலை

/

குழந்தைகளுடன் மனைவி இறந்த நிலையில் மாயமான தனியார் ஊழியரும் தற்கொலை

குழந்தைகளுடன் மனைவி இறந்த நிலையில் மாயமான தனியார் ஊழியரும் தற்கொலை

குழந்தைகளுடன் மனைவி இறந்த நிலையில் மாயமான தனியார் ஊழியரும் தற்கொலை


ADDED : மார் 06, 2025 03:47 AM

Google News

ADDED : மார் 06, 2025 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பெரியமணலி, ஜேடர்பாளையத்தை சேர்ந்-தவர் பிரேம்ராஜ், 33; நாமக்கல் தனியார் வங்கியில் காப்பீட்டு பிரிவில் பணியாற்றினார். சில மாதங்களாக மும்பையிலும் பணி-புரிந்துள்ளார்.

சீராப்பள்ளியை சேர்ந்த தாய் மாமன் சண்முகசுந்தரத்தின் மகள் மோகனப்பிரியாவை, 33, காதல் திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு பிரினிதிராஜ், 6, என்ற மகள், பிரினீஸ் ராஜ், 2 என்ற மகனும் இருந்தனர்.

மும்பையில் இருந்து வந்த பிரேம்ராஜ், சமீபத்தில்தான் நாமக்-கல்லில் சேலம் சாலையில் உள்ள பதி நகருக்கு குடிவந்தார். வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்தார். மோகனபிரியா தனது குழந்தைகளுடன் நேற்று முன்தினம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிரேம்ராஜ் மாயமாகி இருந்தார். ஏ.எஸ்.பி., ஆகாஷ் ஜோஷி தலைமையிலான இரண்டு தனிப்படையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் கரூர் மாவட்டம், கரூர் - வெள்ளியணை ரயில்வே ஸ்டேஷன் இடையே, அமராவதி ஆற்றுப்பாலம் தண்டவா-ளத்தில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. சடலத்தை கைப்-பற்றி போலீசார் விசாரித்ததில், பிரேம்ராஜ் என்பது தெரியவந்தது.

கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று முன்தினம் வந்தவர், ராமேஸ்வரம் செல்ல டிக்கெட் எடுத்துள்ளார். பிறகு ரயில் நிலைய பிளாட்பார்ம் வழியாக நடந்து சென்றவர், ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. தற்கொலை செய்துகொண்ட பிரேம்ராஜூக்கும், ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்துள்ளதாக போலீசார் தெரி-வித்தனர். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

ரூ.50 லட்சம் ஏமாந்து விட்டேன்

பிரேம்ராஜ், 3ம் தேதி எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில், 'பிரேம்ராஜ் ஆகிய நான், ஆன்லைனில் கடந்த, 10 நாட்-களில், 50 லட்சம் ரூபாய் வரை ஏமாந்து விட்டேன். இதை யாரி-டமும் சொல்ல எனக்கு தைரியம் இல்லை.

எனவே நான்கு பேரும் சேர்ந்து தற்கொலை செய்ய முடிவு எடுத்-துவிட்டோம். எங்களை மன்னித்து விடுங்கள்' என குறிப்பிடப்-பட்டிருந்தது.






      Dinamalar
      Follow us