sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வீட்டின் ஓட்டை பிரித்து 10 பவுன் நகை கொள்ளை

/

வீட்டின் ஓட்டை பிரித்து 10 பவுன் நகை கொள்ளை

வீட்டின் ஓட்டை பிரித்து 10 பவுன் நகை கொள்ளை

வீட்டின் ஓட்டை பிரித்து 10 பவுன் நகை கொள்ளை


ADDED : ஜூலை 07, 2024 07:11 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி, : வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எருமப்பட்டி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சிவபாக்கியம், 63; இவர், கடந்த, 10 நாட்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு ஓசூரில் உள்ள, தன் மகன் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நி-லையில், நேற்று காலை, வீட்டிற்கு வந்த சிவபாக்கியம், வீட்டை திறந்து உள்ளே சென்றார்.

அப்போது, ஓடுகளை கழட்டி வைத்து விட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் வைத்திருந்த, 10 பவுன் நகை, 1,000 ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்-றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, எருமப்பட்டி போலீசில், சிவபாக்கியம் புகாரளித்தார்.

அங்கு சென்ற போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள, 'சிசி-டிவி' பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us