/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தாலி செயின் பறித்த திருடன் 24 மணி நேரத்தில் கைது
/
தாலி செயின் பறித்த திருடன் 24 மணி நேரத்தில் கைது
ADDED : ஜூலை 24, 2024 07:19 AM
வெண்ணந்துார் : வெண்ணந்துாரில், அதிகாலையில் பெண்ணிடம் தாலி செயினை பறித்துச் சென்றவரை, 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்-தனர்.
ராசிபுரம் அருகே, வெண்ணந்துார் சொசைட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் மனைவி சுகுணா, 43. கடந்த, 21 இரவு தம்பதியர் வீட்டை பூட்டி விட்டு துாங்கி உள்ளனர். மறுநாள் அதி-காலை நந்தகுமார் நடைபயிற்சி செல்வதற்காக, வீட்டின் கதவை திறந்து சென்றுள்ளார். இதனை கவனித்து உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர், சுகுணா அணிந்திருந்த, 8 பவுன் தாலி செயினை பறித்து சென்றார். நகையை அறுத்துக்கொண்டு, திருடன் வேக-மாக ஓடுவது அப்பகுதி கண்காணிப்பு கேமரா வில் பதிவானது.
வெண்ணந்துார் போலீசார், நேற்று காலை ஏரிக்கரை அருகே இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் சோதனையில் ஈடுபட்ட-போது, வெண்ணந்துார் ராஜ
கணபதி கோவில் தெரு செந்தில் குமார் மகன் தமிழரசன், 27, பிடிபட்டார். இவர்தான், சுகுணவிடம் 8 பவுன் தாலி செயினை பறித்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, 8 பவுன் தாலி செயினை பறிமுதல் செய்தனர். திருடனை, 24 மணி நேரத்தில் பிடித்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.