sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

1வது கொண்டை ஊசி வளைவுஆபத்தான பகுதியாக அறிவிப்பு

/

1வது கொண்டை ஊசி வளைவுஆபத்தான பகுதியாக அறிவிப்பு

1வது கொண்டை ஊசி வளைவுஆபத்தான பகுதியாக அறிவிப்பு

1வது கொண்டை ஊசி வளைவுஆபத்தான பகுதியாக அறிவிப்பு


ADDED : பிப் 27, 2025 02:08 AM

Google News

ADDED : பிப் 27, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1வது கொண்டை ஊசி வளைவுஆபத்தான பகுதியாக அறிவிப்பு

சேந்தமங்கலம்:கொல்லிமலை அடிவாரம், காரவள்ளி ஒன்றாவது கொண்டை ஊசி வளைவில் நடந்த விபத்தையடுத்து, அப்பகுதி ஆபத்தான வளைவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை சுற்றுலா தலமாக உள்ளது. இந்த மலைக்கு செல்ல காரவள்ளியில் இருந்து சோளக்காடு வரை, 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில், 15க்கும் மேற்பட்ட வளைவுகள் மிகவும் ஆபத்தான வளைவுகளாக போலீசாரால் அறிவிக்கப்பட்டள்ளது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் கொல்லிமலையில் இருந்து வியாபாரி ஒருவர், மினி சரக்கு ஆட்டோவில் விசேஷத்திற்காக கூந்தப்பனையை ஏற்றிக்கொண்டு காரவள்ளிக்கு வந்தார்.

அந்த சரக்கு ஆட்டோவில், விவசாயி ஒருவர் அமர்ந்து வந்தார். அப்போது, கடைசி கொண்டை ஊசி வளைவான, ஒன்றாவது கொண்டை ஊசி வளைவில் மினி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பயணம் செய்த விவசாயி உயிரிழந்தார். இதையடுத்து, ஒன்றாவது கொண்டை ஊசி வளைவில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட போலீசார், அந்த இடம் மிகவும் ஆபத்தான வளைவாக அறிவித்துள்ளனர். மேலும், மலைக்கு செல்லும் வாகனங்கள் மிகவும் கவனத்துடன் பயணிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us