/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முத்தாயம்மாள் 'நீட்' அகாடமியில் வரும் 10ல் பயிற்சி வகுப்பு துவக்கம்
/
முத்தாயம்மாள் 'நீட்' அகாடமியில் வரும் 10ல் பயிற்சி வகுப்பு துவக்கம்
முத்தாயம்மாள் 'நீட்' அகாடமியில் வரும் 10ல் பயிற்சி வகுப்பு துவக்கம்
முத்தாயம்மாள் 'நீட்' அகாடமியில் வரும் 10ல் பயிற்சி வகுப்பு துவக்கம்
ADDED : ஜூன் 06, 2024 04:20 AM
ராசிபுரம்: சென்னை முத்தாயம்மாள் கல்வி அறக்கட்டளையால், 1984ம் ஆண்டு, ராசிபுரத்தில் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி தொடங்கப்பட்டது.
தொடங்கி, 40 ஆண்டுகளில், 24 ஆண்டுகளாக தொடர்ந்து மாநில அளவில் முதலிடத்தை பெற்று வருகிறது.கிராமப்புற மாணவர்கள் மருத்துவத்துறையில் சேர, முத்தாயம்மாள் அகாடமி ஆப் எக்ஸலன்ஸ் எனும், 'நீட்' பயிற்சி அகாடமி தொடங்கி உள்ளது. அனுபவமிக்க ஆசிரியர்கள், அனைத்து வழித்தடத்திலும் பஸ் வசதி, இருபாலருக்கும் ஹாஸ்டல் வசதி ஆகியவை உள்ளது.மேலும், 2024 நீட் தேர்வில், 300க்கு, --350 மதிப்பெண் பெற்றவர்களுக்கு, 20 சதவீத கட்டண சலுகை, 350க்கு, --400 மதிப்பெண் பெற்றவர்களுக்கு, 25 சதவீதம், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு, 30 சதவீதம், பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில், 95 சதவீதத்திற்கு மேல் பெற்றவர்களுக்கு, 50 சதவீதம், 90----94 வரை பெற்றவர்களுக்கு, 30 சதவீதம், 85---89 வரை பெற்றவர்களுக்கு, 10 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்படவுள்ளது.இப்பயிற்சி வகுப்பு, வரும், 10- முதல் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் தொடங்க உள்ளது. சேர்க்கை நடந்து வருகிறது. விபரங்களுக்கு, 96777 70837, 95006 43337 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என, கல்லுாரி சேர்மன் பிரேம்குமார் தெரிவித்தார்.