sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

17 ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கு

/

17 ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கு

17 ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கு

17 ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கு


ADDED : ஜன 17, 2025 01:16 AM

Google News

ADDED : ஜன 17, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

17 ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கு

ப.வேலுார் : பரமத்திவேலுார் தாலுகா, ஜேடர்பாளையம் சரளைமேட்டில் வசித்து வருபவர் துரைசாமி, 55. இவர் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாட்டு பொங்கலை முன்னிட்டு, பொங்கல் வைத்து ஆடுகளுக்கு பூஜை செய்து விட்டு, சரளை மேட்டில் உள்ள வீட்டுக்கு சென்று உள்ளார். நேற்று காலை தோட்டத்தில் வேலை செய்யும் ராஜூ, 50, என்பவர் வந்து பார்த்தபோது, பட்டியில் இருந்த, 17 ஆடுகள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

சம்பவம் இடத்துக்கு வந்து போலீசார் விசாரித்தனர். நாமக்கல் மாவட்ட கால்நடை, வனத்

துறையின் சம்பவ இடத்துக்கு வந்து மர்ம விலங்கு கடித்ததா அல்லது தெரு நாய்கள் கடித்ததா என ஆய்வு செய்தனர். இறந்த ஆடுகளை, பிரேத பரிசோதனை செய்வதற்காக ராசிபுரம் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். இறந்த ஆடுகளின் மதிப்பு, ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் இருக்கும் என உரிமையாளர் துரைசாமி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us