ADDED : மே 30, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், கொல்லிமலை, குண்டனிநாடு, புதுக்கோம்பை பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில், சட்டவிரோதமாக மண் வெட்டி கடத்துவதாக, வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற தாசில்தார் மனோகரன், வருவாய் துறையினர், 2 டிப்பர் லாரிகளில் மண் வெட்டி ஏற்றிக்கொண்டு சென்றபோது, லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, லாரியில் இருந்த டிரைவர்கள், கிளீனர்கள் வருவாய் துறையினரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், லாரி உரிமையாளர்கள் குறித்து
விசாரித்து வருகின்றனர்.