sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல் தொகுதியில் 40 பேர் போட்டி 3 ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்பாடு

/

நாமக்கல் தொகுதியில் 40 பேர் போட்டி 3 ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்பாடு

நாமக்கல் தொகுதியில் 40 பேர் போட்டி 3 ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்பாடு

நாமக்கல் தொகுதியில் 40 பேர் போட்டி 3 ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்பாடு


ADDED : ஏப் 05, 2024 01:29 AM

Google News

ADDED : ஏப் 05, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்:''நாமக்கல் லோக்சபா தேர்தலில், 40 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், மூன்று ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது,'' என, மாவட்ட தேர்தல் அலுவலர் உமா பேசினார்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில், வீட்டில் இருந்து ஓட்டு போடும் நிகழ்வில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. இதில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான உமா தலைமை வகித்து பேசியதாவது:

இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக, புகைப்பட வாக்காளர் சீட்டிற்கு பதில், வாக்காளர் தகவல் சீட்டை அச்சிட்டு வழங்க முடிவு செய்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 1,628 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம், அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி நடந்து வருகிறது. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக, 12 வகையான மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும்.

வாக்காளர் இறந்திருக்கும் பட்சத்தில், அவரது வாக்காளர் தகவல் சீட்டை (பூத் சிலிப்) எக்காரணம் கொண்டும் வழங்கக் கூடாது. இன்றும், நாளையும், வரும், 8 என, மூன்று நாட்கள், 85 வயதுக்கு மேற்பட்டவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பம் அளித்தவர்கள் வீட்டிலிருந்து ஓட்டு போடலாம். 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

நாமக்கல் லோக்சபா தேர்தலில், 40 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதனால், மூன்று ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஓட்டுப்பதிவின் போது வாக்காளர்கள் சுதந்திரமாக ஓட்டுகளை செலுத்திடும் வகையில், அனைத்து பணியாளர்களும் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு பேசினார்.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரன், தாசில்தார் சக்திவேல் உள்பட பலர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us