/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாளை தொடங்குகிறது 63 நாயன்மார்கள் விழா
/
நாளை தொடங்குகிறது 63 நாயன்மார்கள் விழா
ADDED : ஆக 09, 2024 03:38 AM
ராசிபுரம்: ராசிபுரத்தில், வல்வில்ஓரியால் கட்டப்பட்ட அறள்வளர்நாயகி உடனமர் கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள, 63 நாயன்மார்களுக்கு ஆடி மாதத்தில் விழா எடுத்து வருகின்-றனர்.
அறுபத்து மூவர் பெருவிழா என்ற பெயரில், கைலாசநாதர் சிவ-னடியார் திருகூட்ட அறக்கட்டளையினர் மூன்று நாட்கள் நடத்தி வருகின்றனர்.
முதல் நாள் விழா நாளை மாலை, 5:00 மணிக்கு குறும்ப நாயனார் குருபூஜையுடன் தொடங்குகிறது. 6:00 மணிக்கு குறும்ப-நாயனார் குறித்து வேல்முருகன் பேசுகிறார். 7:00 மணிக்கு சிலம்-பொலி நாட்டியப்பள்ளி சார்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கி-றது. 11ம் தேதி காலை 7:00 மணிக்கு விநாயகர், முருகன், நந்-திபெருமான் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு திருமஞ்-சன வழிபாடு நடக்கிறது.
மாலை, 3:00 மணிக்கு ஓதுவார் அய்யப்பன் திருமுறை பாடுகி-றார். மாலை, 6:00 மணிக்கு பரத நிருத்யாலயா சார்பில் பரதநாட்-டிய நிகழ்ச்சி நடக்கிறது. 12ம் தேதி காலை, 8:00 மணிக்கு கோவிலில் இருந்து பன்னிரு திருமுறைகள் அடியார் பெருமக்-களை கைலாய வாத்தியம் முழங்க, ஊர்வலமாக அரிமா சங்க மண்டபத்திற்கு கொண்டு வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.
மாலை, 5:00 மணிக்கு, 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடக்கி-றது. இதில், கைலாய வாத்தியங்களுடன் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வரும் சிவனடியார்கள் மற்றும் சிவ பக்-தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.