sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

749 விவசாயிகளுக்கு ரூ.3.57 கோடியில்நுண்ணீர் பாசன கருவிகள் வழங்கல்

/

749 விவசாயிகளுக்கு ரூ.3.57 கோடியில்நுண்ணீர் பாசன கருவிகள் வழங்கல்

749 விவசாயிகளுக்கு ரூ.3.57 கோடியில்நுண்ணீர் பாசன கருவிகள் வழங்கல்

749 விவசாயிகளுக்கு ரூ.3.57 கோடியில்நுண்ணீர் பாசன கருவிகள் வழங்கல்


ADDED : பிப் 20, 2025 01:31 AM

Google News

ADDED : பிப் 20, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

749 விவசாயிகளுக்கு ரூ.3.57 கோடியில்நுண்ணீர் பாசன கருவிகள் வழங்கல்

நாமக்கல்:'மாவட்டத்தில், 749 விவசாயிகளுக்கு, 3.57 கோடி ரூபாய் மதிப்பில், நுண்ணீர் பாசன கருவிகள் வழங்கப்பட்டுள்ளது' என, கலெக்டர் உமா பேசினார்.

நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், நுண்ணீர் பாசனம் மற்றும் விதை கிராமங்கள் திட்டத்தின் கீழ், விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதை கலெக்டர் உமா ஆய்வு செய்தார்.

அப்போது, அவர் கூறியதாவது:பாசன நீரை திறம்பட பயன்படுத்துவதை வலியுறுத்துவதற்காக, நுண்ணீர் பாசனம் அமைப்பதை ஊக்குவிக்கவும், சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியமும், பெரு விவசாயிகளுக்கு, 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. ஒரு பயனாளி, ஐந்து ஹெக்டேர் வரை நிதி உதவி பெற முடியும். ஏற்கனவே பயனடைந்த விவசாயிகள், ஏழு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் புதுப்பித்து மானியத்தையும் பெறலாம். இத்திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில், 749 விவசாயிகளுக்கு, 709 ஹெக்டேர் பரப்பளவிற்கு, 3 கோடியே, 57 லட்சத்து, 14,000 ரூபாய் மதிப்பில் நுண்ணீர் பாசன கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், விதை கிராம திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில், 2024-25ம் ஆண்டில், 3,695 விவசாயிகளுக்கு, பல்வேறு வகையான நெல் ரகங்கள், 71,598 கிலோ வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, பேளுக்குறிச்சி விவசாயி காளியண்ணன், விதை கிராம திட்டத்தின் கீழ், 20 கிலோ விதை நெல்லை மானியமாக பெற்று நெற்பயிர் சாகுபடி செய்துள்ளதையும், விவசாயி செல்வராஜ், நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், ஒரு ஹெக்டேர் பரப்பளவில், 1.05 லட்சம் ரூபாய் மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து மஞ்சள் சாகுபடி செய்துள்ளதையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us