/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
8 தாலுகா ஆபீசில் ரேஷன் கார்டுதாரர் குறைதீர் முகாம்: 148 மனுக்களுக்கு தீர்வு
/
8 தாலுகா ஆபீசில் ரேஷன் கார்டுதாரர் குறைதீர் முகாம்: 148 மனுக்களுக்கு தீர்வு
8 தாலுகா ஆபீசில் ரேஷன் கார்டுதாரர் குறைதீர் முகாம்: 148 மனுக்களுக்கு தீர்வு
8 தாலுகா ஆபீசில் ரேஷன் கார்டுதாரர் குறைதீர் முகாம்: 148 மனுக்களுக்கு தீர்வு
ADDED : ஆக 11, 2024 02:17 AM
நாமக்கல்;மாவட்டத்தில் உள்ள, எட்டு தாலுகா அலுவலகத்தில் நடந்த ரேஷன் கார்டுதாரர் குறைதீர் முகாமில், 148 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் மூலம் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், செல்போன் எண் பதிவு மற்றும் பொது வினியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி மேற்கொள்ளவும், ரேஷன் கார்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும், பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம், மாதந்தோறும், 2-வது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலுார், குமாரபாளையம் தாசில்தார் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில், நேற்று முகாம் நடந்தது. நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகத்தில், தனி தாசில்தார் கோவிந்தசாமி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, தகுதி அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொண்டார். இந்த முகாமில், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் போன் எண் சேர்த்தல் உள்பட, மொத்தம், 148 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்திற்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டன.

