/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பயன்படுத்தாத அரசு கட்டடம் பாராக மாறிய அவலம்
/
பயன்படுத்தாத அரசு கட்டடம் பாராக மாறிய அவலம்
ADDED : ஜூன் 16, 2024 06:41 AM
ராசிபுரம் : பயன்படுத்தாத அரசு கட்டடத்தை ஆக்கிரமிப்பு செய்ததுடன், மாலை நேர பாராக மாறியுள்ளது.
ராசிபுரத்தில் இருந்து ஆர்.புதுப்பட்டி செல்லும் சாலையில் வடுகம் ஊராட்சி அமைந்துள்ளது. பிரதான சாலையில், ஊராட்சி அலுவலகம் முன்பாக, வேளான் உதவி அலுவலர் அலுவலகம் உள்ளது. கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அலுவலகங்களை வேளாண் உதவி அலுவலர்கள் பயன்படுத்துவதில்லை. ஒன்றிய வேளாண்துறை அலுவலகத்திலேயே உதவி அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதனால், இந்த அலுவலகத்தை பயன்படுத்துவதில்லை. பயன்படுத்தாத இதுபோன்ற கட்டடங்களை கறிக்கடை உள்ளிட்ட கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். மேலும், மாலை நேர பாராக மாறியுள்ளது. எனவே, இதுபோன்ற கட்டடங்களை புனரமைத்து வேறு பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் இடித்து அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.