/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இடை நின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க ஆலோசனை
/
இடை நின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க ஆலோசனை
ADDED : ஜூலை 28, 2024 03:52 AM
ராசிபுரம்: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டார வளமையத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை பள்-ளியில் சேர்ப்பதற்கான, மூன்றடுக்கு குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இடை நின்ற மாணவ, மாணவியரை கண்ட-றிந்து பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை பற்றியும், குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து தொழிலாளர் உதவி ஆய்வாளர் அவர்கள் உதவியுடன் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்-ளப்படும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் விஜயன், ராசிபுரம் வட்-டார வளர்ச்சி அலுவலர் கவிதா, வட்டார கல்வி அலுவலர் அருள்-மணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜசேகரன், ஆசி-ரியர் பயிற்றுநர்கள் கலைச்செல்வி, மல்லிகேஸ்வரி, கவிதா, சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர், பள்ளி மேலாண்-மைக்குழு கணக்காளர் மற்றும் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்

