sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பஸ்சில் சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

/

பஸ்சில் சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

பஸ்சில் சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

பஸ்சில் சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு


ADDED : செப் 15, 2024 02:56 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் சுந்தரராஜன், 55; இவர், தனியார் லாரி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் காலை, சுந்தரராஜன் வேலை விஷயமாக, துறையூரில் இருந்து நாமக்கல்லிற்கு பஸ்சில் புறப்பட்டார். பஸ், அலங்கா-நத்தம் பிரிவு அருகே சென்றபோது மயங்கி விழுந்துள்ளார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அலங்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உயிரிழந்தார். எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

சீதாராம் யெச்சூரிக்கு இரங்கல்

ராசிபுரம், செப். 15-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, 72, உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த, 12ல், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறை-விற்கு, நாடு முழுதும், அக்கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்-றனர். அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், இரங்கல் கூட்டம், ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் நடந்தது. மூத்த தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கந்தசாமி, நகர செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்-னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மறைந்த பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு புகழாரம் சூட்டப்பட்டது. தொடர்ந்து, அவரது உருவ படத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினர். மாவட்ட குழு உறுப்பினர்கள் தங்கராஜ், ராணி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜோதிமணி, ம.தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் ஜோதிபாசு, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us