/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர்
/
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர்
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர்
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர்
ADDED : செப் 15, 2024 02:56 AM
நாமக்கல்: 'தமிழக அரசின் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி-றது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல், 5 ஆண்டுக-ளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு, 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 300 ரூபாய், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்க-ளுக்கு, 400 ரூபாய், பட்டதாரிகளுக்கு, 600 ரூபாய் வீதம், 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
அதேபோல், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்-தொகை, வரும் காலங்களில், மாதம் ஒன்றுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்களுக்கு, மாதம், 600 ரூபாய், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 750 ரூபாய், பட்டதாரிகளுக்கு, 1,000 ரூபாய் வீதம், 10 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, 5 ஆண்டு முடிவுற்ற பதிவுதாரர்களும், பதிவு செய்து ஓராண்டு முடிவுற்ற அனைத்து மாற்றுத்திறனாளி-களும் தகுதியானவர்கள்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், 45 வயதுக்கு மிகாமலும் மற்றவர்கள், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். தகுதியு-டையவர்கள் மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்திற்கு, அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.