/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோரிக்கை அட்டையுடன் பணிக்கு வந்து ஆர்ப்பாட்டம்
/
கோரிக்கை அட்டையுடன் பணிக்கு வந்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 26, 2024 03:03 AM
நாமக்கல்: நாமக்கல் நகராட்சி அலுவலர்கள், கோரிக்கை அட்டை அணிந்த-படி பணிக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியா-ளர்கள் ஒருங்கிணைப்பு குழு மாநில மையத்தை சேர்ந்த அலுவ-லர்கள், பணியாளர்கள் நேற்று நுாதன ஆர்ப்பாடத்தில் ஈடுபட்-டனர். தங்களது கோரிக்கை அட்டையை அணிந்து கொண்டு போராட்டத்தை மேற்கொண்டனர்.
நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும், 110 பணியா-ளர்கள் கோரிக்கை அட்டையை அணிந்து பணிக்கு வந்தனர். அரசு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணியிட மாறுதல்களை கலந்தாய்வு மூலம் மேற்-கொள்ள வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், எல்லை விரிவாக்க பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை எழுதி அணிந்தி-ருந்தனர்.

