sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஓட்டுப்பதிவிற்கு தேவையான பொருள் பிரித்து அனுப்பும் பணி துவக்கம்

/

ஓட்டுப்பதிவிற்கு தேவையான பொருள் பிரித்து அனுப்பும் பணி துவக்கம்

ஓட்டுப்பதிவிற்கு தேவையான பொருள் பிரித்து அனுப்பும் பணி துவக்கம்

ஓட்டுப்பதிவிற்கு தேவையான பொருள் பிரித்து அனுப்பும் பணி துவக்கம்


ADDED : ஏப் 17, 2024 02:16 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, ஆறு சட்டசபை தொகுதிகளில், 1,628 ஓட்டுச்சாவடிகளில், வரும், 19ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

அதையொட்டி, ஓட்டுப்பதிவு மையங்களுக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் ஓட்டை சரிபார்க்கும் கருவிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கணினி மூலம் ஒதுக்கீடு செய்து, ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு, அதற்குரிய அறையில் போலீசார் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளது.

அதன் தொடர்ச்சியாக, ஓட்டுப்பதிவிற்கு தேவைப்படும் தகவல் பலகை, அழியாத மை, முத்திரைகள், ஊதா நிற ஸ்டேம்ப் பேடு, பேனா, பென்சில், ஏ4 தாள்கள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, நுால், கார்பன் பேப்பர், ரப்பர் பேன்டு, டேப், பேக்கிங் சீட், பிளேடு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள், ஓட்டுச்சாவடிகளுக்கு பிரித்து அனுப்ப தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், நாமக்கல் தாலுகா அலுவலகத்தில், லோக்சபா தேர்தலையொட்டி, ஓட்டுப்பதிவிற்கு தேவையான பொருட்களை, ஓட்டுச்சாவடி வாரியாக பிரித்து அனுப்ப தயார் செய்யும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் தாசில்தார் சீனிவாசன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us