/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு ஆண்கள் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு
/
அரசு ஆண்கள் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு
ADDED : செப் 11, 2024 06:45 AM
குமாரபாளையம்: நாமக்கல் மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்ட-மாக உருவாக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், போலீசார் சார்பில் போதைப்-பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இன்ஸ்பெக்டர் தவமணி தலைமை வகித்தார்.
இதில், போதை பொருட்களால் ஏற்படும் தீமை, அதனை வாங்க கூடாது, போதை பொருள் விற்கும் நபர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது போன்றவை குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்-பட்டது. தொடர்ந்து, போதை பொருட்களை உபயோகப்படுத்த-மாட்டோம் என, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
தலைமை-யாசிரியர் ஆடலரசு, எஸ்.ஐ., தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ.,க்கள் குணசேகரன், ராம்குமார், உள்பட பலர் பங்கேற்றனர்.