/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தண்ணீர் வரத்து குறைவால் வறண்ட காவிரி
/
தண்ணீர் வரத்து குறைவால் வறண்ட காவிரி
ADDED : ஜூலை 14, 2024 03:32 AM
பள்ளிப்பாளையம்: தண்ணீர் வரத்து குறைவால், பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி ஆறு வறண்டு பாறைகளாக காட்சியளிக்கின்றன.
காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போது, பள்ளிப்-பாளையம் பகுதியில் இரு கரையையும் தொட்டு தண்ணீர் செல்லும். மேலும், பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள ஓடப்பள்ளி, சமயசங்கிலி ஆகிய இரண்டு தடுப்பணையிலும் முழுமையாக தண்ணீர் தேக்கி வைக்-கப்பட்டு மின் உற்பத்தி நடக்கும். சில மாதங்களாக காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. தற்போது குடிநீ-ருக்கும் மட்டும் தண்ணீர் வருகிறது.
இதனால், பள்ளிப்பாளையம் பகுதியில் பரந்து விரிந்து காணப்-படும் காவிரி ஆற்றில், தண்ணீர் சிறு ஓடையாக செல்கிறது. இதனால் ஆற்றில் பார்க்கு இடமெல்லாம் பாறைகளாக காணப்ப-டுகின்றன. பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள ஓடப்பள்ளி, சமயசங்கிலி தடுப்ப-ணையில் தற்போது குடிநீருக்கும் மட்டும் தண்ணீர் தேக்கி வைக்-கப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவால், பள்ளிப்பா-ளையம் பகுதி காவிரி ஆற்றுப்பகுதியில் மீன்பிடி தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.