sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்ச்சிக்கு கல்வித்துறை ஒப்புதல்

/

1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்ச்சிக்கு கல்வித்துறை ஒப்புதல்

1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்ச்சிக்கு கல்வித்துறை ஒப்புதல்

1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்ச்சிக்கு கல்வித்துறை ஒப்புதல்


ADDED : மே 10, 2024 02:25 AM

Google News

ADDED : மே 10, 2024 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்;நாமக்கல் மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 1 முதல் 9ம் வகுப்பு வரையில், மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றதற்கான ஒப்புதல் நேற்று வழங்கப்பட்டது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியரை தேர்வில் தோல்வியுற செய்யக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.நாமக்கல் மாவட்டத்தில், 850க்கும் மேற்பட்ட பள்ளிகளில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், 301 அரசு, தனியார் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளின் தேர்ச்சிக்கு ஒப்புதல் வழங்கும் நிகழ்ச்சி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நேற்று முன்தினம் மாவட்ட கல்வி அலுவலர் விஜயன் (உயர்நிலை) தலைமையிலும், நேற்று, மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) (தனியார் பள்ளிகள்) மரகதம் தலைமையிலும் நடந்தன. இதில், தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்வதற்கான ஒப்புதல் கடிதம் தலைமையாசிரியர்களிடம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us