/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் உழவர் சந்தையில் கத்தரிக்காய் விலை உயர்வு
/
ராசிபுரம் உழவர் சந்தையில் கத்தரிக்காய் விலை உயர்வு
ராசிபுரம் உழவர் சந்தையில் கத்தரிக்காய் விலை உயர்வு
ராசிபுரம் உழவர் சந்தையில் கத்தரிக்காய் விலை உயர்வு
ADDED : செப் 02, 2024 03:13 AM
ராசிபுரம்: ராசிபுரம் உழவர் சந்தையில், கடந்த வாரம் கிலோ, 22 ரூபாய்க்கு விற்ற தக்காளி நேற்று, 18 ரூபாய்க்கு விற்றது. ஒரே வாரத்தில், 4 ரூபாய் குறைந்துள்ளது. ஆனால், கடந்த வாரம் கிலோ, 30 ரூபாயக்கு விற்ற கத்தரி, நேற்று, 40 ரூபாயாக உயர்ந்-துள்ளது. ஒரே வாரத்தில் கிலோவுக்கு, 10 ரூபாய் உயர்ந்துள்ளது.
இதேபோல், வெண்டை, 20, புடலை, 20, பீர்க்கன், 38, பாகல், 45, சுரைக்காய், 14, பச்சை மிளகாய், 45, சின்ன வெங்காயம், 35, பெரிய வெங்காயம், 55, முட்டைகோஸ், 38, கேரட், 110, பீன்ஸ், 75, பீட்ரூட், 35 ரூபாய்க்கு
விற்பனையானது.நேற்று ஒரே நாளில், 242 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்க கொண்டு வந்திருந்தனர். 19,860 கிலோ காய்-கறி, 4,960 கிலோ பழங்கள், 290 கிலோ பூக்கள் என மொத்தம், 25,110 கிலோ காய்கறி, பழங்கள்
விற்பனையாகியுள்ளது. இதன் மொத்த மதிப்பு, 9.2 லட்சம் ரூபாயாகும். 5,160 பேர் உழவர் சந்-தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.