/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முட்டை 12 நாட்களில் 125 காசு உயர்வு
/
முட்டை 12 நாட்களில் 125 காசு உயர்வு
ADDED : மே 10, 2024 02:30 AM
நாமக்கல்;நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை, 12 நாட்களில், 125 காசு உயர்ந்துள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 6 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினமும், 5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) தினமும் பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த மாதம், 28ம் தேதி ஒரு முட்டை விலை, 410 காசுகளாக இருந்தது. தினமும், 10 காசு, 20 காசு என உயர்ந்து வந்தது நேற்று முன்தினம், 525 காசுகளாக இருந்த முட்டை விலை நேற்று மீண்டும், 10 காசுகள் உயர்ந்து, 535 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, 12 நாட்களில், 125 காசு உயர்ந்துள்ளதால் பண்ணையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (காசுகளில்) : சென்னை, 580, பர்வாலா, 505, பெங்களூரு, 565, டெல்லி, 490, ஐதராபாத், 490, மும்பை, 545, மைசூரு, 570, விஜயவாடா, 485, ஹொஸ்பேட், 520, கோல்கட்டா, 560.