ADDED : செப் 05, 2024 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, ஆவாரங்காடு பகுதியை சேர்ந்தவர்
முகமதுபாஷா, 72. இவர், அப்பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று காலை, டூவீலரில், ஆர்.எஸ்., சாலை, குட்டைமுக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த அரசு பஸ், டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளா-னது. இதில், கீழே விழுந்த முகமதுபாஷா மீது, பஸ் சக்கரம் ஏறி, இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தார். பள்ளிப்-பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.