sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆடி வெள்ளியை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

/

ஆடி வெள்ளியை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

ஆடி வெள்ளியை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

ஆடி வெள்ளியை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : ஜூலை 26, 2024 03:09 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ஆடி வெள்ளியை முன்னிட்டு, ப.வேலுாரில் நேற்று நடந்த பூ ஏலத்தில் குண்டுமல்லி கிலோ, 560 ரூபாய்க்கு விற்பனையானது.

பரமத்தி வேலுார் தாலுகா பகுதியில் உள்ள பிலிக்கல்பாளையம், சாணார்பாளையம், ப.வேலுார், பரமத்தி, கரூர் மாவட்டம் சாமங்கி, வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்-டுமல்லி, முல்லை, சம்பங்கி, சாமந்தி, அரளி பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து, ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்திற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர். கடந்த சில வாரங்களாக விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இன்று ஆடி வெள்ளியை முன்-னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். இதனால் பூ தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது.

ப.வேலுாரில் நேற்று நடந்த ஏலத்தில் கடந்த வாரம், 300 ரூபாய்க்கு விற்பனையான குண்டு மல்லி நேற்று, 560 ரூபாய், கடந்த வாரம் 80 ரூபாய்க்கு விற்பனையான சம்பங்கி, 120 ரூபாய், 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி, 120 ரூபாய்க்கு விற்பனையானது. 80 ரூபாய்க்கு விற்ற சாமந்தி, 170 ரூபாய், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை பூ, 400 ரூபாய்க்கு விற்பனையாகின.

பூக்கள் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்-துள்ளனர்.






      Dinamalar
      Follow us