sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மோகனுாரில் ஒரு மணி நேரம் கனமழை

/

மோகனுாரில் ஒரு மணி நேரம் கனமழை

மோகனுாரில் ஒரு மணி நேரம் கனமழை

மோகனுாரில் ஒரு மணி நேரம் கனமழை


ADDED : மே 19, 2024 02:58 AM

Google News

ADDED : மே 19, 2024 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மோகனுார் பகுதியில், அதிக அளவு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை, 5:00 மணிக்கு, மோகனுார் பகுதியில் வானில் கருமேகம் சூழ்ந்தது. அதனால், மழை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, மாலை, 6:00 மணிக்கு மழை பெய்ய துவங்கியது.

ஒரு மணி நேரம், எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், மோகனுார் - ப.வேலுார் சாலை, வள்ளியம்மன் கோவில் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ், மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து, இரண்டு அடி உயரத்துக்கு தேங்கி நின்றது. அதனால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களை தள்ளி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதற்கிடையில், இரவு, 7:45 மணிக்கு மீண்டும் மழை பெய்ய துவங்கியது. இது, இரவு, 8:30 மணிக்கு மேலும் நீடித்தது.






      Dinamalar
      Follow us