sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொல்லிமலையில் கனமழை: மக்கள் மகிழ்ச்சி

/

கொல்லிமலையில் கனமழை: மக்கள் மகிழ்ச்சி

கொல்லிமலையில் கனமழை: மக்கள் மகிழ்ச்சி

கொல்லிமலையில் கனமழை: மக்கள் மகிழ்ச்சி


ADDED : மே 10, 2024 02:26 AM

Google News

ADDED : மே 10, 2024 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்;கொல்லிமலையில், நேற்று பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்தது போல், நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையிலும் இந்தாண்டு போதிய மழையில்லாததால் கடுமையான வெயில் வாட்டி வந்தது.

இதனால், மலைப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு கடந்த, 20 ஆண்டுகள் இல்லாத வகையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், மலைவாழ் மக்கள் முதன் முதலாக தண்ணீர் லாரியில் குடிநீர் பிடித்து பயன்படுத்தினர்.

இந்நிலையில், நேற்று கொல்லிமலையில் உள்ள சோளக்காடு, செம்மேடு, வளப்பூர் நாடு உள்ளிட்ட மலையின் பெரும்பாலான பகுதிகளில், மதியம் முதல் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் தண்ணீர் பெருக்கெடுத்து வீதிகளில் சென்றது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்ததுடன் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் நிம்மதி அடைந்தனர்.

* வெண்ணந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று காலை முதல் மதியம் வரை வழக்கம் போல வெயிலின் தாக்கம் இருந்த போதிலும், மதியத்திற்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசத் தொடங்கியது. கடும் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த வெண்ணந்துார் சுற்றுவட்டார பகுதி மக்கள், மழையால் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us