/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பள்ளியில் மாநில பூப்பந்து போட்டி துவக்கம்
/
அரசு பள்ளியில் மாநில பூப்பந்து போட்டி துவக்கம்
ADDED : ஜூலை 21, 2024 02:40 AM
குமாரபாளையம்;குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், மாநில அளவில் பள்ளி மாணவியருக்கான, இரண்டு நாள் பூப்பந்து போட்டி துவங்கியது.
தலைமையாசிரியை (பொ) சாரதா, ஒருங்கிணைப்பாளர் அப்பாதுரை ஆகியோர் தலைமை வகித்தனர். தேசிய சாம்பியனும், மாநில பூப்பந்து கழக இணை செயலருமான விஜய் பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்தார்.
இதில், சென்னை, கடலுார், தஞ்சை, நாமக்கல், ஈரோடு, சேலம், கோவை, புதுக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 25 அணியினர் பங்கேற்றனர். நாக் அவுட் மற்றும் லீக் முறையில் போட்டிகள் நடந்தன.
இதில், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு, சேலம் பகுதிகளை சேர்ந்த நடுவர்கள் பங்கேற்றனர். இன்று இறுதி போட்டிகள் நடக்கின்றன.