sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாணவர்களிடையே தமிழ் கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும்: துணை வேந்தர்

/

மாணவர்களிடையே தமிழ் கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும்: துணை வேந்தர்

மாணவர்களிடையே தமிழ் கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும்: துணை வேந்தர்

மாணவர்களிடையே தமிழ் கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும்: துணை வேந்தர்


ADDED : ஜூலை 02, 2024 07:51 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 07:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: ''கல்லுாரி மணவர்களிடையே, தமிழ் கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும்,'' என, தமிழ்-நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணை வேந்தர் செல்வகுமார் பேசினார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்-கலையின் உறுப்பு கல்லுாரியான, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு அறிவியல் தமிழ் இயக்கம் சார்பில், கால்நடை அறிவியல் தமிழை ஊக்கு-விக்கும் வகையில், தேசிய அளவிலான 'கால்ந-டைகளின் நலம் விவசாயிகளின் வளம்' என்ற தலைப்பில், இரண்டு நாள் கருத்தரங்கு நடந்தது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்-கலை துணைவேந்தர் செல்வகுமார் தலைமை வகித்து, சிறந்த நுால் மற்றும் சிறந்த பொதுக்கட்-டுரை ஆசிரியர்களை கவுரவித்து விருது வழங்கி, 'கல்லுாரி மணவர்களிடயே தமிழ் கற்கும் ஆர்-வத்தை ஊக்குவிக்க வேண்டும்' என்றார்.

வேலுார் மாவட்டம், திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர் ஆறுமுகம், வாழ்நாள் சாதனை-யாளர் மற்றும் முன்னவர் விருதுகளை வழங்-கினார். கால்நடை அறிவியல் தமிழ் இயக்க தலைவர் ரவிமுருகன், இயக்கத்தின் துவக்கம், கடந்து வந்த பாதை, குறிக்கோள்கள் குறித்து விளக்கினார். கால்நடை அறிவியல் தமிழ் இயக்-கத்தின் பொதுச்செயலாளர் குமாரவேலு, தமிழ் மொழியின் சிறப்பை விவரித்து வாழ்த்துரை வழங்கினார். கல்லுாரி முதல்வர் செல்வராஜூ வரவேற்றார்.

'தமிழ்வழி ஆராய்ச்சிகள்' என்ற தலைப்பில், ஆறு தலைப்புகளில் மூத்த தமிழ் ஆர்வலர்களால் சிறப்பு அமர்வு நடந்தது. அதில், மொத்தம், 180க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பங்-கேற்று, தமது ஆராய்ச்சிகளின் முடிவுகளை, தமிழில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில், 8 அமர்வுகளில் விவரித்த கட்டுரைகள், கருத்த-ரங்கு இதழாக வெளியிடப்பட்டது.

பல்கலை முன்னாள் துணைவேந்தர் பிரபாகரன் கலந்து கொண்டு, விருது வழங்கி பேசினார். துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us