sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தேவாலயங்களில் 'குருத்தோலை' ஞாயிறு பவனி

/

தேவாலயங்களில் 'குருத்தோலை' ஞாயிறு பவனி

தேவாலயங்களில் 'குருத்தோலை' ஞாயிறு பவனி

தேவாலயங்களில் 'குருத்தோலை' ஞாயிறு பவனி


ADDED : மார் 25, 2024 01:11 AM

Google News

ADDED : மார் 25, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு, குருத்தோலை ஞாயிறாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, மாவட்டம் முழுதும் கிறிஸ்துவ மக்கள் ஊர்வலமாக சென்று தேவாலயங்களில் வழிபாடு நடத்தினர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய ஞாயிறு, தனது பாடுகளை மக்களுக்கு உணர்த்த கழுதை மேல் அமர்ந்து ராஜா போன்று ஜெருசலேம் நகர் நோக்கி சென்றதாக நம்பப்படுகிறது. குருத்தோலையை ஏந்தியபடி, 'ஓசன்னா' பாடலை பாடியபடி அவர் பவனியாக சென்றதை, 'குருத்தோலை' ஞாயிறாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். இதனை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் கிறிஸ்தவ மக்கள், 'குருத்தோலை' ஞாயிறு என்று, குருத்தோலையை ஏந்தி பவனியாக சென்று சிறப்பு திருப்பலியில் பங்கேற்கின்றனர்.

இதையொட்டி, உலகம் முழுதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. தமிழகத்திலும், நேற்று அதிகாலை முதலே பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத்தில், குருத்தோலை ஞாயிறு சிறப்பு ஜெபம், நேற்று நடந்தது. பங்கு தந்தை மாணிக்கம் தலைமையில் நடந்த வழிபாட்டில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

மோகனுார் அடுத்த ஆர்.சி.பேட்டப்பாளையம் புனித செசீலி ஆலயத்தில் பங்கு தந்தை ஜான்போஸ்கோ தலைமையில், குருத்தோலை ஏந்தியபடி, ஓசன்னா பாடலை பாடி, கிறிஸ்தவர்கள் பவனி சென்றனர். தொடர்ந்து, சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர். கடந்த, பிப்., 14ல், சாம்பல் புதனுடன், 40 நாட்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் துவங்கினர். ஈஸ்டர் பண்டிகையுடன் இந்த தவக்காலம் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us