/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பஸ் மோதி தறி மெக்கானிக் சாவு
/
அரசு பஸ் மோதி தறி மெக்கானிக் சாவு
ADDED : ஆக 18, 2024 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்,: கடலுாரை சேர்ந்தவர் நெல்சன்ரோசாரியார், 29. இவர், பள்ளிப்-பாளையம் அருகே, வெப்படை பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் தறி மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
நேற்று காலை, வெப்படை செட்டியார் கடை பகுதியில், சாலையை கடக்க முயன்றார். அப்போது, சேலத்தில் இருந்து சென்ற அரசு பஸ், இவர் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்டு படுகாயம-டைந்த நெல்சன்ரோசாரியாரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவம-னையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். வெப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.

