/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'கனவு இல்லம்' திட்டத்தில் 140 பயனாளிகளுக்கு ஆணை
/
'கனவு இல்லம்' திட்டத்தில் 140 பயனாளிகளுக்கு ஆணை
ADDED : ஜூலை 28, 2024 03:58 AM
மோகனுார்: 'கனவு இல்லம்' திட்டத்தில், 140 பயனாளிகளுக்கு, 4.90 கோடி ரூபாய் மதிப்பில், வீடு கட்டுவதற்கான ஆணையை, எம்.பி., ராஜேஸ்குமார் வழங்கினார்.
மோகனுார் பி.டி.ஓ., அலுவலகத்தில், 'கனவு இல்லம்' திட்-டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, வீடு கட்டுவதற்-கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம், நகரமைப்பு மண்-டல திட்டக்குழு உறுப்பினர் மதுராசெந்தில் ஆகியோர் முன்-னிலை வகித்தனர். எம்.பி.,யும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்-டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார், 140 பயனாளிக-ளுக்கு, 4.90 கோடி ரூபாய் மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ''முதற்-கட்டமாக மோகனுார் பகுதியில், 140 பயனாளிகளுக்கு வீட்டு-மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அனைத்து ஒன்றியங்க-ளிலும், தகுதியுள்ள பயனாளிகள் விடுபடாத வகையில், அனைவ-ருக்கும் வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டு வருகிறது,'' என்றார்.
உதவி திட்ட அலுவலர் பாலகுரு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் நவலடி, டவுன் பஞ்., சேர்மன் வனிதா, துணைத்தலைவர் சரவணகுமார், ஒன்றியக்குழு தலைவர் சரஸ்-வதி, உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

