/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காணாமல் போனவர் கிணற்றில் சடலமாக மீட்பு
/
காணாமல் போனவர் கிணற்றில் சடலமாக மீட்பு
ADDED : ஏப் 28, 2024 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: புதுச்சத்திரம் அருகே, கோவிந்தம்பாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ், 22. இவருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படும். கடந்த, 25ல் இருந்து இவரை காணவில்லை என உறவினர்கள் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில்,நேற்று தேவராஜ், கோவிந்தம்பாளையம் பஞ்., கிணற்றில் சடலமாக மிதப்பதாக, புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற ராசிபுரம் தீயணைப்பு துறையினர், கிணற்றில் மிதந்து கொண்டிருந்த தேவராஜின் உடலை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

