/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வடமாநில தொழிலாளி மயங்கி விழுந்து பலி
/
வடமாநில தொழிலாளி மயங்கி விழுந்து பலி
ADDED : ஆக 17, 2024 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்:உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நதீம், 22; இவர், பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த ஏமப்பள்ளி பகுதியில் உள்ள சாக்கு குடோனில், கடந்த, இரண்டு மாதமாக வேலை செய்து வந்தார்.
இவருக்கு, நேற்று முன்தினம் இரவு, நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், நதீம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மொளசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.