/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தலைக்கவசம் அணியாததால் திருப்பி அனுப்பிய போலீசார்
/
தலைக்கவசம் அணியாததால் திருப்பி அனுப்பிய போலீசார்
ADDED : ஆக 04, 2024 03:34 AM
சேந்தமங்கலம்: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், இளைஞர்கள் டூவீலர்களில் சென்றனர். இவர்கள் கொண்டை ஊசி வளைவு-களில் அதிக வேகத்துடன் செல்லும் போது விபத்து நடந்து வந்-தது. இதை தடுக்கும் வகையில், காரவள்ளியில் போலீசார் சோத-னைச்சாவடி அமைத்து, எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் தலைமையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ஹெல்மெட் இல்-லாமல் டூவீலர்களில் வந்தவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.
கண்ணனுார் மாரியம்மன்கோவில் விழா கோலாகலம்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம், ஆர்.எஸ்., சாலையில் பிரசித்தி பெற்ற கண்-ணனுார் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி, 18ல் திரு-விழா நடைபெறும். இந்தாண்டு திருவிழா ஆடி, 1ல் துவங்கப்-பட்டது. நேற்று முன்தினம் இரவு, பக்தர்கள் தீர்த்தக்குடம், அலகு குத்தி ஊர்வலமாக சென்றனர். நேற்று ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, அதிகாலை முதலே பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்-தனர்.