/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வன்கொடுமை சட்டத்தில் 2 பேருக்கு 'காப்பு'
/
வன்கொடுமை சட்டத்தில் 2 பேருக்கு 'காப்பு'
ADDED : ஆக 01, 2024 02:01 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த மலையாம்பட்டியை சேர்ந்தவர் விஜ-யமார்த்தாண்டன், 44; சென்ட்ரிங் தொழிலாளி. விபத்தில், முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டதால், மனைவி வைஜெயந்தி தான் டூவீலரில் வேலைக்கு அழைத்து சென்று வருகிறார். நேற்று முன்தினம் காலை, அவ்வாறு வேலைக்கு சென்று கொண்டிருந்த-போது, அவர்களுக்கு முன்னாள், புதுப்பட்டி ரோடு பெட்ரோல் பங்க் அருகே, மலையாம்பட்டி போயர் தெருவை சேர்ந்த வெங்க-டாஜலம் மகன் தினேஷ், 24, கந்தன் மகன், சரவணன், 30, ஆகியோர், டூவீலரில் தாறுமாறாக ஓட்டிச்சென்றனர்.
இதற்கு வைஜெயந்தி, 'வண்டியை பார்த்து ஓட்டுங்கள்' எனக்கூறி-யுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தினேஷ், சரவணன் இரு-வரும், வண்டியில் இருந்து விஜயமார்த்தாண்டனை கீழே தள்ளி, தரக்குறைவாக பேசியுள்ளனர். இதில், காயமடைந்த விஜயமார்த்-தாண்டன், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகார்படி, நாமகிரிப்பேட்டை போலீசார், வன்கொடுமை சட்டத்தில், தினேஷ், சரவணன் ஆகிய இருவ-ரையும் கைது செய்தனர்.