/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரேஷன் குறைதீர் முகாம்: 128 மனுக்களுக்கு தீர்வு
/
ரேஷன் குறைதீர் முகாம்: 128 மனுக்களுக்கு தீர்வு
ADDED : செப் 15, 2024 03:05 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், பொது வினியோக திட்டம் மூலம், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், மொபைல் போன் எண் பதிவு மற்றும் பொது வினி-யோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள, பொது வினியோகத்-திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம், ஒவ்வொரு மாதமும், இரண்-டாவது சனிக்கிழமை நடத்தப்படுகிறது.
அதின்படி, இம்மாதத்திற்கான பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம், மாவட்டத்தில், நாமக்கல், ராசி-புரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்-கோடு, ப.வேலுார், குமாரபாளையம் என, எட்டு தாலுகா அலுவ-லகத்தில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் நடந்தது. அந்தந்த வட்ட வழங்கல் தாசில்தார் தலைமை வகித்தனர்.நாமக்கல் தாலுகாவில், வட்ட வழங்கல் தாசில்தார் கோவிந்த-சாமி தலைமையில் நடந்த முகாமில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், மொபைல் போன் சேர்த்தல் குறித்த மனுக்களை அளித்தனர்.
மாவட்டம் முழுவதும், 8 தாலுகாவில் நடந்த முகாமில், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல் போன் எண் மாற்றம், திருத்தம், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் என, மொத்தம், 128 மனுக்கள் வரப்பெற்றன. அவை அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டன.