/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பள்ளி வளாகத்தில் உள்ள தேன்கூட்டை அகற்ற கோரிக்கை
/
அரசு பள்ளி வளாகத்தில் உள்ள தேன்கூட்டை அகற்ற கோரிக்கை
அரசு பள்ளி வளாகத்தில் உள்ள தேன்கூட்டை அகற்ற கோரிக்கை
அரசு பள்ளி வளாகத்தில் உள்ள தேன்கூட்டை அகற்ற கோரிக்கை
ADDED : ஜூலை 14, 2024 03:28 AM
எருமப்பட்டி: எருமப்பட்டி டவுன் பஞ்., அப்பேத்கர் நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், 1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை படித்து வரு-கின்றனர். மிகவும் பழமை வாய்ந்த இப்பள்ளி வளாகத்தில், 70 ஆண்டை கடந்த பெரிய வேப்ப மரங்கள் உள்ளன. இந்த மரக்கி-ளைகளில் பெரிய அளவிலான தேன்கூடு உள்ளதால் மாணவர்கள் ஆசிரியர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஒருசில நேரத்தில் அதிக காற்று வீசும் போது மரக்கிளைகள் ஆடினால், தேன் கூட்டில் உள்ள தேனீக்கள் பறக்கின்றன. அப்-போது அங்கு விளையாடி கொண்டிருக்கும் மாணவர்களை தேனீக்கள் கடிப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே, கல்வித்-துறை அதிகாரிகள், மாணவர்களின் நலன் கருதி தேன் கூட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குட்கா விற்ற 2 கடைக்கு 'சீல்'பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை சுற்றுவட்டார பகு-தியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்-யப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, நேற்று காலை, பள்ளிப்பாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன், வெப்படை போலீசார் சேர்ந்து மளிகை கடை, டீ கடை, பெட்டி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, படவீடு, பச்-சாம்பாளையம், வெப்படை ஆகிய பகுதியில் சோதனை நடத்-தியதில், இரண்டு கடையில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இரண்டு கடைகளையும் பூட்டி, 'சீல்' வைத்து, தலா, 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.