/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு கலை கல்லுாரியில் சாலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு
/
அரசு கலை கல்லுாரியில் சாலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு
அரசு கலை கல்லுாரியில் சாலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு
அரசு கலை கல்லுாரியில் சாலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு
ADDED : ஜூலை 26, 2024 03:08 AM
நாமக்கல்: நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் ரெட் கிராஸ் சார்பில், மாவட்ட அளவிலான சாலை பாதுகாப்பு விழிப்-புணர்வு கருத்தரங்கு நடந்தது.
முதல்வர் ராஜா தலைமை வகித்தார். பெரியார் பல்கலை யூத் ரெட் கிராஸ் மண்டல அலுவலர் பத்மசேகரன், நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்து பேசினர். அப்போது, பெரும்பாலான விபத்துக்கள் அதி-வேகம், அஜாக்கிரதை, சீல்பெல்ட் அணியாமல் செல்லும்போது, துாக்க கலக்கத்தில் பயணம் மேற்கொள்வது போன்ற சமயங்களில் நடப்பதை பட விளக்கங்களுடன் எடுத்துரைக்கப்பட்டது.
மாவட்ட ரெட் கிராஸ் சேர்மன் மாதையன், செயலர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் விபத்தில்லா மாவட்டம் என, பெயர் எடுப்-பதற்கு மாணவ, மாணவியர் சாலைகளில் விழிப்புணர்வோடும், விதிமுறைகளை பின்பற்றி பயணிக்க வேண்டும் என பேசினர். ஏற்பாடுகளை கல்லுாரி சாலை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்-பாளர் சந்திரசேகரன், யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.

