/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிறுதானிய பயிர் உற்பத்தி பயிற்சி
/
சிறுதானிய பயிர் உற்பத்தி பயிற்சி
ADDED : செப் 05, 2024 02:42 AM
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட, மரப்பரை கிராமத்தில், வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படும், 'அட்மா' திட்டம் மூலம், சிறுதானிய பயிர் உற்பத்தி குறித்து பயற்சி அளிக்கப்பட்-டது.
வட்டார துணை வேளாண்மை அலுவலர் பழனிவேல் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற தோட்டக்கலை துணை அலு-வலர் முருகவேல், சிறுதானியங்களின் வகைகள், முக்கியத்துவம், பயன்கள், சிறுதானியங்கள் சாகுபடி செய்தல், பூச்சி நோய் தாக்-குதல், கட்டுப்பாட்டு முறை, மதிப்பு கூட்டுதல், சந்தைப்படுத்-துதல், இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளுதல், மண்-புழு உரம் தயாரித்தல் அதன் பயன்கள் போன்ற தொழில்நுட்பங்-களை தெளிவாக விளக்கமளித்தார்.கால்நடை உதவி மருத்துவர் ஹாரனி, கோமாரி நோய் தடுப்பூசி போடுதல், கால்நடைத்துறையின் திட்டங்கள் குறித்து விளக்-கினார். உதவி வேளாண்மை அலுவலர் மோகன், உயிர் உரங்கள், நுண்ணுாட்டத்தின் பயன்கள், நுண்ணுாட்டம் இருப்பு விபரம், வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் மானிய திட்-டங்கள் குறித்து விளக்கினார். பயிற்சியில், சிறுதானிய உற்பத்தி-யாளர் குழு உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.