/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கள்ளச்சாராய சம்பவம்: பா.ஜ., ஆர்ப்பாட்டம்
/
கள்ளச்சாராய சம்பவம்: பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 24, 2024 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்;கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்து, பா.ஜ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து, 55 பேர் இறந்தனர். இச்சம்பவத்தை கண்டித்து, நகர பா.ஜ., சார்பில், நகர தலைவர் சேகர் தலைமையில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக அரசு பதவி விலகக்கோரி கண்டன கோஷம் எழுப்பினர்.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடந்ததால், டி.எஸ்.பி., இமயவரம்பன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள் என, 16 பேரை கைது செய்தனர்.